19. அருள்மிகு நீலமேகப் பெருமாள் கோயில்
மூலவர் நீலமேகப் பெருமாள்
உத்ஸவர் சௌந்தர்யராஜன்
தாயார் சௌந்தர்யவல்லி
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் சார புஷ்கரணி
விமானம் சௌந்தர்ய விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருநாகை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'நாகப்பட்டினம்' என்று அழைக்கப்படுகிறது. நாகப்பட்டினம் இரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து எதிர்த் தெருவில் சிறிது தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
தலச்சிறப்பு

Nagai Gopuram Nagai Moolavarகிரேதாயுகத்தில் இத்தலத்தில் ஆதிசேஷன் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்தான். பெருமாள் காட்சி தந்து, தமது சயனமாக ஏற்றுக் கொள்வதாக அருள்புரிந்தார். அதனால் இத்தலம் அவனது பெயரால் 'நாகன்பட்டினம்' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'நாகப்பட்டினம்' என்று மாறியதாகக் கூறப்படுகிறது.

மூலவர் நீலமேகப் பெருமாள் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் சௌந்தர்யராஜன். தாயாருக்கு சௌந்தர்யவல்லி என்னும் திருநாமம். நாகராஜன், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

இக்கோயிலில் உள்ள அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கலச் சிலை மிகவும் அபூர்வமான ஒன்று. அவரது ஒருகை பிரகலாதன் தலைமீதும், மற்றொரு கை அபயஹஸ்தமாகவும், மற்ற கைகள் ஹிரண்யகசிபுவை வதம் செய்வது போலவும் இருக்கும் அழகிய சிலை.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com